பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற இந்திய பெண்மணி கமலா சஹானி ஆவார். (முனைவர் பட்டத்தை இந்தியாவில் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி இ.கே.ஜானகி அம்மா ஆவார். இவர் பின்னர் இந்திய தாவரவியல் ஆய்வகத்தின் இயக்குனரானார்.) 1930களில் இந்திய அறிவியல் கழகத்தில் கமலாவை சேர்த்துக் கொள்வதற்கு சர் சி.வி ராமன் அவர்கள் முதலில் மறுத்துள்ளார். பெண்கள் ஆராய்ச்சிக்கு பொருத்தமானவர்கள் இல்லை என்று ராமன் கருதினாராம். பின்னர் சிலரின் வற்புறுத்தலின்பேரில் அனுமதித்தார். கமலா அந்த ஆய்வுக்கூடத்தில் உணவுப் பொருட்களில் உள்ள புரதங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். அதன் மூலம் உயிர் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய அழைக்கப்பட்டார். அங்கு செல்லிலுள்ள சைடோக்குரோம் எனும் நொதிப்பொருளைக் கண்டுபிடித்தார். இதற்காக முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை 40 பக்கங்களே கொண்டது.
டெல்லியிலுள்ள லேடி ஹார்டிஞ் மருத்துவக் கல்லூரியில் உயிர் வேதியியல் தலைவராக பணிபுரிந்த பின் கூனூரிலுள்ள சத்து ஆய்வு சோதனை சாலையில் பணி புரிந்தார். திருமணத்திற்குப் பிறகு மும்பையிலுள்ள ராயல் அறிவியல் கழகத்தில் உயிர் வேதியியல் பேராசிரியராக இருந்தார். அங்கு கடலை வகைகளின் சத்து குறித்து ஆய்வு செய்தார். சத்து குறைந்த குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பயன்படக்கூடிய பனைமரத்திலிருந்து கிடைக்கும் ‘நீரா ‘ என்பது குறித்த ஆய்விற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றார்.